வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

நறுமணமுள்ள நெய்ப்பொங்கல் செய்வது எப்படி ?






           நறுமண நெய்ப்பொங்கல் !!





செய்யத் தேவையான பொருட்கள் :-



நயம் பொன்னி பச்சரிசி கால் படி, பாசிப்பருப்பு 


1௦௦ கிராம், முந்திரிபருப்பு 11, மிளகு 11. சீரகம் 


சிறிதளவு, இஞ்சி ஒரு சிறுதுண்டு, கருகப்பிலை 


சிறிது,மஞ்சள்பொடிசிறிதளவு,உப்புதேவையான 


அளவு, பெருங்காயத்தூள் சிறிது,நெய் 1௦௦ கிராம், 





செய்முறை (Method ):-   முதலில் வாணலியை 


அடுப்பில் வைத்து பற்றவைத்து சூடானவுடன் 


அதில் பாதி அளவுக்கு நெய் விட்டு அதில் 


முந்திரிப்பருப்பை போட்டு நன்றாக 


பொன்நிறமாக வறுத்து தனியே எடுத்து 


வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த 


வாணலியில் மீண்டும் சிறிதளவு நெய் ஊற்றி 


அது சூடானவுடன அதில் மிளகு, நறுக்கிய 


இஞ்சித்துண்டுகள்,சீரகம், சிறிதளவு 


பெருங்காயத்தூள், கருகப்பிலை ஆகியவை 


போட்டு, மிளகு வெடிக்கும் பக்குவம் வந்தவுடன் 


அடுப்பை அணைத்துவிடவும். அதன் பிறகு கால் 


படி பொன்னி அரிசி பச்சஅரிசியை நன்றாக 


களைந்து அதில் வறுத்து வைத்து பின்னர் 


ஆறவைத்த பாசிப்பருப்பையும் போட்டு, மீண்டும் 


நன்றாக நல்ல தண்ணீரில் அலசி நீரை சுத்தமாக 


வடித்துவிட்டு அதில் 2.3/4 பங்கு நல்ல தண்ணீரை 


விட்டு ஊறவைக்கவும். பின்னர் இந்த ஊறிய 


பச்சரிசி,பாசிப்பருப்பு கொண்ட நீரி கலந்ததை 


ஒரு நல்ல பாத்திரத்தில் வைத்து அதில் மிளகு, 


சீரகம், இஞ்சி,கருகப்பிலை ஆறவைத்திருந்ததை 


போட்டு தேவையான அளவு உப்பும், சிறிதளவு 


மஞ்சள் தூளும் போட்டு, நன்றாக அடிவரை 


கிண்டி கிளறியபின் குக்கரில் வைத்து 3 விசில் 


வரும்வரை காத்திருந்து, லேசான ஒழுகு தீயில் 


15 நிமிடங்கள்வரை வைக்க வேண்டும். 


அதன்பிறகு அடுப்பை அணைத்து விட்டு, ஆற 


வைக்க வேண்டும். அதன் பிறகு விசிலை 


எடுத்துவிட்டு, உள்ளே நன்கு வெந்த பொங்கலை 


வெளியில் எடுத்து நன்றாக கிளறி அதில் முந்திரி 


பருப்பையும் போட்டு நன்றாக நெய்யை ஊற்றி 


எடுத்துப் பரிமாறவும்.


இப்போதுநறுமணமுள்ளநெய்ப்பொங்கல்தயார் !!



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக