" என் சமையல் அறையில் "... ... ... ...
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் எனது இனிய
காலை வணக்கங்கள். இன்றைய
தினம், நம்மில் உள்ளவர்களில்
மிகப்பெரும்பான்மையோர்
அவர்களது இல்லங்களில், இட்லி
எனப்படும் காலை உணவின்
கதாநாயகன், அவ்வளவு
மெதுவாகவோ, அல்லது
நிறமாகவோ, இருப்பதென்பது
இல்லை.
இதற்கு என்ன காரணம் ? இதனை
எப்படி நாம் சரி செய்து
கட்டுரைதனில் குறிப்பிட்டுஉள்ளபடி
மணக்கும் மல்லிகைப் பூப்போல
மிகவும் மெல்லிய, மிருதுவான
இட்லி தயாரிப்பது, என்பதை
விளக்கத்துடன் உங்களுக்குத்
தெரிவிப்பதே இந்தக் கட்டுரையின்
மூல காரணம் ஆகும்.
இட்லி பெரும்பான்மையோர்
வீடுகளில் கல்லு போல இருக்க
காரணம் :-
1) நல்ல தரமான, இட்லி அரிசி,
உருட்டு உளுந்து பயன்படுத்தாது
இருப்பது முழுமுதல் காரணம்.
2) தேவையான நேரம் மேலே
சொன்ன அரிசி மற்றும் உளுந்து
இவைகளை குளிர்ந்த நீரினில்
குறிப்பிட்ட நேரம் வரை ஊற
வைக்காது இருப்பது.
3) அரைப்பதற்கு முன்னர்
இவைகளை நன்றாக மூன்றுமுறை
அலசி நீரினில் கழுவி சுத்தம்
செய்திடாமல் அப்படியே
அரைத்துவிடுவது.
அன்பர்களே !!
மேலேசொன்ன மூன்றுகாரணங்கள்
தான் வீடுகளில் இட்லி கல்லு போல
இருந்திட காரணம். சரி !! அப்படி
என்றால் இதனை எப்படி நாம் சரி
செய்வது ?
அனபர்களே !!
அந்த இரகசியத்தை உங்களுக்குத்
தெரிவிப்பதற்குத்தான்
இன்றையதினம்
" எனது சமையல் அறையில் "....
என்னும் இந்த அரிய சமூக
வலைதளம் உங்களுக்கு படம்
பிடித்துக் காட்டிட இருக்கிறது.
ஆனால் அதனை நீங்கள் தெரிந்து
கொள்வதற்கு முன்பாக, ஒரு சிறிய
இடைவேளை !!
கூடிய விரைவினில் நாம்
சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
SHEAF மதுரை T.R. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக