மணக்கும் மல்லிகைப்பூ இட்லி செய்வது எப்படி ?
**************************************************************************************
மணக்கும்மல்லிகைப் பூ இட்லி !!
செய்திட வழிவகைகள் !!
********************************************************************************
செய்யத்தேவையான பொருட்கள் :-
1) நல்ல தரமான இட்லி அரிசி 1/2 படி.
2) உதயம் பிராண்டு உருட்டு உளுந்து
1/8 படி.
3) கல் உப்பு = ஒரு கைப்பிடி முழுதும்.
செய்முறை (METHOD):-
முதலில் இட்லி அரிசி, மற்றும்
உதயம் உருட்டு உளுந்து,
இவைகளை மேலே குறிப்பிட்ட
அளவு அளந்து ஒரு பாத்திரத்தில்
வைத்து அதன்மீது நன்றாக
மூழ்கிடும் வண்ணம் சுத்தமான
நல்ல தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம்
முதல் 3.1/2 மணி நேரம் வரை ஊற
வைத்திட வேண்டும். அதன்பின்னர்
முதலில் நன்றாக ஊறிய உருட்டு
உளுந்தை 3 முறை நன்றாக கழுவி
சுத்தம் செய்த பின்னர் கிரைண்டரில்
போட்டு அரைய, அரைய, கொஞ்சம்
கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி
(நிறைய தண்ணீர் ஊற்றினால்
உளுந்து மாவு பொங்காமல்
போய்விடும். இட்லி மெதுவாக
இருக்காது)நன்கு பொங்கப்பொங்க
அரைத்து வழித்து வைத்துக்
கொள்ளவும். அதன்பிறகு
ஊறியஅரிசியைஅதே கிரைண்டரில்
நன்றாக மையாக தண்ணீர் ஊற்றி
ஊற்றி அரைத்து (அளவுடன்
தண்ணீர் ஊற்றவும். கட்டியாக,
நன்றாக, நைசாக அரைத்துக்
கொண்டால் மிகவும்
நல்லது)அதையும், வழித்து
வைத்துள்ள, உளுந்துமாவோடு
சேர்த்து, அதன்பின் கல்உப்பு ஒரு
கைப்பிடி நிறைய, போட்டு நன்றாக,
இரண்டையும் கலந்து, அழுத்தி
பிசைந்திடவும். இதை ஒரு பெரிய
பாத்திரம் ஒன்றினில் வைத்து இரவு
முழுதும் மூடி போட்டு மூடி வைத்து
புளித்திடச் செய்திட வேண்டும்.
அதன் பிறகு காலையில் எழுந்து
பாத்திரத்தில் நன்றாக பொங்கிய
மாவினை கரண்டி வைத்து நன்றாக
அடிமுதல் மேல் வரை கலக்கியபின்
இட்லி செய்திடும் கண் தட்டில் துணி
விரித்துஅவித்துஎடுத்து வைக்கவும்.
இப்போது சுவை மிகுந்த மணக்கும்
மல்லிகைப்பூ இட்லி தயார்.
செய்துபார்த்து எப்படி இருந்தது
என்பதை எனது கீழ்க்கண்ட மின்-
அஞ்சலில் தெரிவிக்கவும்.
astrobalu1954@gmail.com
நன்றி !! வணக்கம் !!
அன்புடன்,
SHEAF. மதுரை T.R. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக