சனி, 28 ஜூன், 2014

வறுத்து அரைச்ச துவையல் செய்வது எப்படி ?







       வறுத்து அரைச்ச துவையல் !!





செய்யத் தேவையான பொருட்கள் :-



தேங்காய் பூவாகத் துருவியது 1 கப்,


உடைச்ச உளுத்தம்பருப்பு, மிளகாய் 


வற்றல் 7, பெருங்காயத்தூள்,புளி,உப்பு,


கருகப்பிலை, நல்லெண்ணெய் சிறிதளவு.




செய்முறை :-  அடுப்பில் வாணலியை வைத்து 


நன்றாகசூடானவுடன்,கொஞ்சம்நல்லெண்ணெய் 

3 கரண்டி ஊற்றி அதில் மிளகாய் வற்றலை 


போட்டு, கருகிவிடாமல்வறுத்துஎடுத்துவைத்துக் 


கொள்ளவும். பிறகு அதில்வாணலியில்)இன்னும் 


கொஞ்சம்நல்லெண்ணெய்ஊற்றிஅதில்உடைச்ச 


உளுந்து, புளி சிறிய துண்டு, பெருங்காயத்தூள் 


சிறிதளவு,கருகப்பிலை சிறிதளவு போட்டு 


லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 


அதன் பிறகு வாணலியில் 1 கப் தேங்காய் நன்கு 


துருவியதைப்போட்டு, பொன் நிறமாக வறுத்து 


எடுத்துவைத்துக்கொள்ளவும். வறுத்து 


வைத்துள்ள பொருட்கள்அனைத்தும்நன்றாகசூடு 


ஆறியதன் பின்னர், மிச்சியில் தேங்காய்ப்பூ, 7 


மிளகாய் வற்றல்,புளி ஆகியவற்றை போட்டு 


தண்ணீர் சிறிதளவு இட்டு, நன்றாக பிறுபிறுஎன 


அரைத்துக்கொள்ளவும். அதன்பின்னர் இதில் 


வறுத்த உடைச்ச உளுத்தம்பருப்பு,கருகப்பிலை, 


ஆகியவற்றையும் சேர்த்து, தேவையான அளவு 


உப்பு சேர்த்து, மையாக அரைச்சு எடுத்து 


பரிமாறவும்.



இப்போது சுவையானவறுத்துஅரைச்சதுவையல் 


தயார். இதைக் கைபடாமல் பரிமாறினால், 


ஒன்றிரண்டு நாட்கள் வரையிலும் பிரிஜ்ஜில் 


வைத்து சாப்பிடலாம்.



மீண்டும் எமது அடுத்த என் சமையல் அறையில் 


பதிவில் சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக