புதன், 21 டிசம்பர், 2016

இட்லி உப்புமா செய்வது எப்படி ? ... அது இப்படி !!





இட்லி உப்புமா செய்வது எப்படி ?

அது இப்படி !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு உங்கள்
அனைவரையும்  " என் சமையல் அறையில் "
என்ற வலைதளத்தில் சந்திப்பதில் நான் மிக்க
மன மகிழ்ச்சி அடைகிறேன் அன்புத்தமிழ்
நெஞ்சங்களே.

பொதுவாக, நம்மில் ஒவ்வொருவரின் வீட்டிலும்
காலையில் நாம் தயாரிக்கும் தினசரி உணவு
வகைகளில், மிகமிக முக்கியமானதோர்
இடத்தை வகிக்கும் திருவாளர்: இட்லி என்ற
பதார்த்தம், எப்படியாவது மிச்சப்பட்டுப்போவது
என்பது  தவிர்க்க இயலாத ஒன்று ஆகும்.
அப்படி மிச்சப்பட்ட இட்லியை எப்படி சுவைமிகு
உப்புமாவாக மாற்றுவது என்பதை உங்களுக்கு
விரிவாக, விளக்கமாக, செயல்முறை வடிவில்
சொல்லித்தருவதே இன்றைய எனது பணி
என்பதை இத்தருணத்திலே குறிப்பிடக் கடமைப்
பட்டுள்ளேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


                   " இட்லி உப்புமா "


செய்திடத் தேவையான பொருட்கள் :-

அவித்து வைத்து ஆறிய இட்லிகள் 6, மிளகாய் வற்றல் (சம்பா) நறுக்கிய துண்டுகள் 6, நல்லெண்ணெய் இரண்டுசிறு கரண்டி அளவு (தாளிக்க) கடுகு சிறிதளவு, உடைச்சவெள்ளை உளுத்தம் பருப்பு சிறிதளவு, பெருங்காயத்தூள்
சிறிதளவு, கருகப்பிலை சிறிதளவு, உப்பு கரைசல்சிறிதளவு.

செய்முறை :- ( Method of cooking )

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஆறிய
இட்லிகளை நன்றாக பிசைந்து, உதிர்த்து (கட்டி
இன்றி)தூளாக(உதிரி) வைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து பற்ற
வைக்கவும். சட்டி சூடான பிறகுதான் அதில் இரண்டுசிறிய கரண்டிகள் அளவு நல்லெண்ணெய் ஊற்றிஅது சூடானபிறகு அதில் கடுகு,உடைச்ச உளுத்தம்பருப்பு இவைகளைப்போட்டு பொன்னிறமாக பருப்பு
வந்தவுடன், கருகப்பிலை மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் இவைகளை போட்டு, நறுக்கிவைத்துள்ள சம்பாமிளகாய் வற்றலையும் போட்டு நன்கு வதக்கியபிறகுஅதில் உதிர்த்து வைத்துள்ள இட்லி தூளை போட்டுநன்றாக கிண்டி வரவும். அடுப்பில் தீயின் அளவை 
குறைத்து வைத்துக்கொள்ளவும்.இப்போது அந்த 
இட்லித்தூளின் மேல் நாம் ஏற்கனவேதயாரித்து வைத்துள்ள உப்புக்கரைசலை தெளிக்கவேண்டும். 
பிறகு அவைகள் ஒன்றுசேர கிண்டிக்கொண்டே 
வரவேண்டும். உப்பு போதுமா என்று பார்த்து 
இறக்கிய பின் பரிமாறவும். இப்போது சுவைமிகுந்த 
இட்லி உப்புமா தயார்.( பின் குறிப்பு:-  வாணலியில் ஒட்டி இருக்கும் 
இட்லி தூள் அதை ஒரு சட்டுவத்தால் சுரண்டி 
பொருக்குபோன்ற பதத்தில் இருக்கும் அதையும் 
விட்டுவிடாமல் சாப்பிடவும். மிக நன்றாக சுவை 
மிகுந்ததாக இருக்கும் நேயர்களே.)

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.






புதன், 24 ஆகஸ்ட், 2016

மண் மணக்கும் மதுரை சாம்பார் (சாதத்திற்கு சாப்பிடுவது) செய்வது எப்படி ? விளக்கவுரை !!







                  மதுரை சாம்பார் !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கம்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய இந்த 
வலைதளத்தின் பெரும்பாலான அன்பு  
ரசிகப்பெருமக்களிடம் இருந்து வந்திருந்த 
வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இன்று 
"மணமணக்கும் மதுரை சாம்பார் " செய்வது 
எப்படி என்று இங்கே விளக்கமாக எழுதி 
இருக்கின்றேன். அதை சமைத்துப்பார்த்து 
நீங்களும் அதன் சுவைக்கு, ருசிக்கு, அடிமை 
ஆகிடவேண்டும் என்று வாழ்த்தி, உங்கள் 
முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றேன்.

************************************************************************************************************


                   மதுரை சாம்பார் !!


தேவையான பொருட்கள் :-

புளி நெல்லிக்காய் அளவு, துவரம்பருப்பு அரைக்கால் படி ( 2௦௦ கிராம்) MTR சாம்பார் பொடி 3 கரண்டி, மிளகாய் தூள் 2 கரண்டி, மஞ்சள் தூள் 2 கரண்டி, பெருங்காயத்தூள் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, தக்காளி 1,பச்சை மிளகாய் 6 நெட்டு வசத்தில் கீறியது ,முருங்கை  
காய் பத்து துண்டுகள்,சின்ன வெங்காயம் தோல் உரித்தது 11,1 பெரிய வெங்காயம் தோல் உரித்து நெட்டு வசத்தில் நறுக்கியது, உருளைக்கிழங்கு 1, 1 காரட் வட்ட வடிவமாக நறுக்கியது, 2 பீன்ஸ் ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கியது,1அவரைக்காய் 
அதே அளவில்நறுக்கியது,கடுகு,உடைத்த உளுத்தம் பருப்பு, வெந்தயம், தாளிக்க நல்லெண்ணெய் தேவையான அளவு.தாளிக்க 
கருவேப்பிலை,கொத்தமல்லி தளைதேவையான அளவு, துருவிய தேங்காய் 3 கரண்டி.காய்ந்த சம்பாமிளகாய் வற்றல் (நீளமான)3.



செய்முறை :-  முதல்நாள் இரவில் நெல்லிக்காய் அளவு புளி, அரைக்கால் படி துவரம்பருப்பு இவைகளை தனித் தனியே நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும். 

பின்பு காலை ஊற வைத்திருந்த புளியை நன்கு அழுத்தி கரைத்து அதன் வடிசலைத்தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பிறகு ஊற வைத்திருந்த துவரம்பருப்பையும், உருளைக் கிழங்கு ஒன்றையும் குக்கரில் வேறு வேறு பாத்திரத்தில் வைத்து 3 விசில், 15 நிமிடம் அடுப்பை மினிமம் சூட்டில் வைத்து பின் அடுப்பை அணைத்து ஆற விடவும். 

அதன் பின்பு புளி கரைசலில் சாம்பாருக்குத் தேவையான அளவு உப்பு, 3 கரண்டி MTR சாம்பார் பொடி, 2 கரண்டி மிளகாய்த்தூள், 2 கரண்டி மஞ்சள்தூள்,சிறிது  பெருங்காயத்தூள்,போட்டு, கட்டி இல்லாமல் நன்றாக கரைத்து கரைசலை 
எடுத்து வைத்துக்கொள்ளவும். 

அதன் பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அது நன்கு சூடானவுடன் அதில் மூன்று முதல் நான்கு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதுவும் சூடானபின்பு அதில் கடுகு நன்கு பொரிந்த பின், 
உடைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயம் சிறிதளவு இவைகளை போட்டு சிறிது பெருங்காயத்தூள் தூவவும். அதன் பிறகு கருகப்பிலை இலைகளை அதில் போட்டு பின் 3 காய்ந்த மிளகாய் வற்றலை போடவும். அதன் பிறகு நெட்டு வசத்தில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்,நான்கு துண்டுகளாக நறுக்கிய தக்காளி, பெரிய,சிறிய 
வெங்காயம், காரட் உள்ளிட்ட காய்கறிகள், வேகவைத்து தோல் உரித்து எட்டு துண்டுகளாக வெட்டிய உருளைக் கிழங்கு, இவைகளையும் போட்டு 2 கரண்டி நல்லெண்ணெய் இந்தக் காய்கறி மீது ஊற்றி, நன்றாக கிண்டி அதனை 
எண்ணையில் நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்  நிறமாக ஆனவுடன், சாம்பார் பொடி புளி கரைசலை வாணலியில் ஊற்றவும். நன்றாக கொதிக்க விடவும். முருங்கைக்காய்நன்கு வெந்தவுடன்  அதில் வேகவைத்து ஆறிய துவரம் பருப்பை நன்கு மசித்து, அதில் துருவிய தேங்காய் தூளை போட்டு, கொதித்துக்கொண்டு இருக்கும் சாம்பாரில் போடவும். அதில் தேவையான அளவு கொத்தமல்லி தளையையும் போட்டு, உப்பு, உரைப்புசரிபார்த்து இறக்கியபின்பு மேலும் கொஞ்சம் கொத்தமல்லி இதழ்களை தூவவும். இப்போது சுவையான மணமணக்கும் 

           " மதுரை சாம்பார் "  


உங்கள் நாவின் ருசிக்காகக் காத்திருக்கிறது. 

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை T.R. பாலு. 


புதன், 6 ஜனவரி, 2016

சுவைமிகுந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி ?





            சேப்பங்கிழங்கு ரோஸ்ட் !!




தேவையான பொருட்கள் :-  

நீளவசம் உள்ள சேப்பங்கிழங்கு 250 கிராம், 
வறுப்பதற்கு எண்ணை தேவையான அளவு, 
உப்புத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் ருசிக்கு 
ஏற்ப.

செய்திடும் முறை :-

முதலில் நீளவசம் உள்ள சேப்பங்கிழங்குகளை
நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்து அதன் பின்னர் அதை ஒரு வாணலியில் உள்ள கொதிக்கும்நீரில் போட்டு நன்றாக வேக வைத்திடவும். அது நன்றாக வெந்த பிறகு அதை வெளியில் எடுத்து சூடு நீங்கி ஆற வைக்கவும். அதன்பின்பு அந்தக் கிழங்குகளை அதன் வெளிப்புறத் தோல்களை நீக்கி விட்டு நீள வசத்தில் ஒரு கிழங்கினை மூன்று முதல் நான்கு 
துண்டுகளாகநெட்டுவசத்தில்உடைந்துவிடாமல் 
பக்குவமாக நறுக்கி அதை நன்றாக காய வைக்க 
வேண்டும். சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் 
(நறுக்கி வெந்த கிழங்குத்துண்டுகளை) காய்ந்த பிறகு ஒரு வாணலியில் பொரிப்பதற்கு எண்ணையை விட்டு அது மிதமான சூடு அடைந்த பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்த சேப்பங்கிழங்குதுண்டுகளை போட்டு மிதமான சூட்டில் நன்றாக பிரவுன் நிறம் வருகின்ற வரை, அடுப்பின் அருகில் 
இருந்து கொண்டே நன்றாக கிழங்குத் துண்டுகளை கவனத்துடன் வறுக்கவேண்டும். எண்ணையில் பொங்கிடும் நுரைகள் அடங்கிவிட்டது என்றால், நன்றாக கிழங்கு 
துண்டுகள் வெந்து விட்டன என்று பொருள். அதன் பிறகு அந்தக் சேப்பங்கிழங்குத துண்டுகளை எண்ணைநன்றாக வடிந்த பிறகு அதில் தேவைக்கு/ருசிக்கு  ஏற்ப உப்புத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் தூவி நன்றாக 
பிறட்டி அனைத்துக் கிழங்குத் துண்டுகளிலும் அந்த தூள்களை நன்றாக கலந்திடும் படியாக பிறட்டிக்கொடுத்து அதன்பின்பு சாப்பிட பரிமாறவும். இப்போது சுவை மிகுந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.  திருமலை.இரா.பாலு.