சனி, 28 ஜூன், 2014
வறுத்து அரைச்ச துவையல் செய்வது எப்படி ?
செய்யத் தேவையான பொருட்கள் :-
தேங்காய் பூவாகத் துருவியது 1 கப்,
உடைச்ச உளுத்தம்பருப்பு, மிளகாய்
வற்றல் 7, பெருங்காயத்தூள்,புளி,உப்பு,
கருகப்பிலை, நல்லெண்ணெய் சிறிதளவு.
செய்முறை :- அடுப்பில் வாணலியை வைத்து
நன்றாகசூடானவுடன்,கொஞ்சம்நல்லெண்ணெய்
போட்டு, கருகிவிடாமல்வறுத்துஎடுத்துவைத்துக்
கொள்ளவும். பிறகு அதில்வாணலியில்)இன்னும்
கொஞ்சம்நல்லெண்ணெய்ஊற்றிஅதில்உடைச்ச
எடுத்துவைத்துக்கொள்ளவும். வறுத்து
வைத்துள்ள பொருட்கள்அனைத்தும்நன்றாகசூடு
அரைத்துக்கொள்ளவும். அதன்பின்னர் இதில்
வறுத்த உடைச்ச உளுத்தம்பருப்பு,கருகப்பிலை,
பரிமாறவும்.
இப்போது சுவையானவறுத்துஅரைச்சதுவையல்
வைத்து சாப்பிடலாம்.
பதிவில் சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
செவ்வாய், 24 ஜூன், 2014
தக்காளி கிச்சடி செய்வது எப்படி ?
" தக்காளி கிச்சடி "
(THAKKAALI KICHCHADI)
செய்யத் தேவையான பொருட்கள் :-
(REQUIRED INGREDIENTS)
நாட்டுத்தக்காளி 1/2 கிலோ, பெரிய
வெங்காயம் 1/2 கிலோ ,
பச்சைமிளகாய் 5 முதல் 6 வரை ,
கருகப்பிலை, நல்லெண்ணெய்,
பெருங்காயத்தூள், காய்ந்தமிளகாய்
வற்றல் 5, உப்பு தேவையான அளவு.
செய்முறை :- (METHOD)
முதலில் வாணலியை அடுப்பில்
வைத்து சூடானபிறகு
நல்லெண்ணெய் விட்டு அதில்நன்கு
பிளவுற்ற பச்சைமிளகாய் 5 முதல் 6
போட்டுவிட்டு அது நன்றாக
வதங்கியபின்பு அதில் நன்கு நெட்டு
வசத்தில் வெட்டிய பெரிய
வெங்காயம் 1/2 கிலோவை நன்றாக
பொன்னிறமாக வதக்கவும். பிறகு
அதில் நறுக்கிவைத்த நாட்டுத்
தக்காளி 1/2 கிலோவை போட்டு
மேலும் இரண்டு கரண்டி
நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக
வதக்கவும். பிறகு இவை
அனைத்தும் மூழ்கும் விதமாக
தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க
விடவும். 5 முதல் 1௦ நிமிடம் வரை
நன்றாக கொதிநீரில் வேகவைத்து
வெந்தவுடன், குழிவான
வடிகட்டியில் கொட்டி கொதிநீரை
வடிகட்டவும். பிறகு ஒரு பெரிய
தட்டில் தக்காளி,வெங்காயம்,பச்சை
மிளகாய் வெந்ததை மின்விசிறியின்
கீழ் வைத்து நன்றாக ஆற
வைக்கவும். வடிகட்டிய நீரும் ஆறிட
வேண்டும். நன்கு ஆறிய இந்த
பொருட்களை மிக்சியில் வைத்து
நன்றாக மசிய கடைந்து
எடுத்துக்கொள்ளவும்.
அதன்பின்னர் மீண்டும் வாணலியை
அடுப்பில் வைத்து சூடானவுடன்
நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி
ஊற்றி சூடானவுடன், கடுகு
சிறிதளவு, உடைத்த வெள்ளை
உளுத்தம் பருப்பு, இவைகளைப்
போட்டு, கடுகு நன்கு வெடித்துச்
சிதரியவுடன் அதில் கொஞ்சம்
கருகப்பிலை இலைகளைப் போட்டு,
5 சிவப்பு மிளகாய் வற்றல்
கிள்ளிப்போட்டு அதன்பிறகு,
நறுக்கிவைத்த (நெட்டு வசத்தில்)
பெரிய வெங்காயத்தை கொஞ்சம்
போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இதில் மிக்சியில் போட்டு
நன்கு மசித்த தக்காளியை போட்டு
அதனுடன், இரண்டு தேக்கரண்டி
பெருங்காயத் தூளையும்,
தேவையான அளவு உப்பையும்
சேர்த்து, வடிகட்டிய தண்ணீர் ஊற்றி
நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.
தேவைபட்டால் மேலும் கொஞ்சம்
ஊற்றிக்கொள்ளவும். நன்றாக
தளதளவென்று கொதித்தபின்னர்
உப்பு சரி பார்த்து இறக்கிபரிமாறவும்.
இந்த தக்காளிக் கிச்சடி இட்லி,
தோசை, சப்பாத்தி, பூரி, உப்புமா
இவைகளுக்கும் சூடான
சாதத்திற்கும், மோர் சாதத்திற்கும்
சேர்த்து சாப்பிட்டால் மிகவும்
நேர்த்தியான சுவையைத் தரும்.
செய்து பார்த்து சாப்பிட்டுப்
பார்க்கவும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
வியாழன், 19 ஜூன், 2014
இட்லி மிளகாய்ப்பொடி செய்வது எப்படி ? இதோ உங்களுக்கு வழிகாட்டும் முறை இது !!
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அன்புத் தமிழ்நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம். இன்றுமுதல் ஒரு
புதிய வலைதளம்,
" என் சமையல் அறையில் "
என்னும் தலைப்பினில் உங்களுக்காக ஒரு
வழிகாட்டிடும் கட்டுரைதலமாக வலம்வரக்
காத்துக்கொண்டு இருக்கிறது. பார்த்து, படித்து
அதேபோல செய்து ருசித்து சாப்பிட்டு
வாழ்ந்திடுங்கள்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் SHEAF. மதுரை T.R. பாலு.
************************************************************************************************************
இட்லி மிளகாய்ப்பொடி !!
IDLY CHILLY POWDER
************************************************************************************************************
செய்யத்தேவையான பொருட்கள் :-
( INGREDIENTS REQUIRED)
1/2 கிலோ கடலைப்பருப்பு, 1/2 கிலோ உடைத்த
வெள்ளை உளுத்தம் பருப்பு,நன்கு காய்ந்த
மிளகாய் வற்றல், 1௦ நன்கு உரித்தமலைப்பூண்டு
பல்,சிறிதளவு காய்ந்த கருகப்பிலை இலை, 3
சிறிய கரண்டி பெருங்காயத்தூள், கொஞ்சம்
நல்லெண்ணெய், உப்பு, தேவையான அளவு.
செய்யும் முறை :- ( METHOD OF PREPARATION )
அடுப்பில், வாணலியைவைத்து நன்றாக
சூடானபிறகு அதில் கடலைப்பருப்பை நன்றாக
பொன்னிறமாக வறுத்து அடுத்து ஒரு பேசினில்
வைத்து ஆற வைக்கவும். இதுபோலவே
உடைத்த உளுத்தம்பருப்பையும் பொன்னிறமாக
வறுத்து பின் மற்றும் ஒரு பேசினில்
ஆறவைத்திடு. அதன் பின்னர் அதேவாணலியில்
சிறிதளவு நல்லெண்ணையை ஊற்றி அதில்
7௦முதல் 9௦ வரை ( காரத்தின் தேவைக்கு ஏற்ப-1/2
கிலோ கடலைப்பருப்பு, 1/2 கிலோ உடைச்ச
உளுத்தம் பருப்பிற்கு எண்பது காய்ந்த சம்பா
வற்றல் தேவைப்படும்.)சம்பா வற்றல் நன்கு
காய்ந்ததைப் போட்டு கருக விடாமல் ஒரே
சீராக கொஞ்சம் கல் உப்புபோட்டு
வறுத்துஎடுத்து இதையும்
ஆற வைக்கவும். பிறகு அதே வாணலியில்
கருகப்பிலை, மற்றும் மலைவெள்ளைப்பூண்டு
இவற்றைப்போட்டு இத்துடன் 3 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் போட்டு இதையும் நன்றாக
வறுத்துஎடுத்து ஆற வைத்திடவும். எல்லாம்
நன்றாகஆறியபின்னர்இவைகள் (கடலைப்பருப்பு
உடைச்ச உளுந்தம்பருப்பு,கருகப்பிலை,பூண்டு,
மிளகாய் வற்றல் இவைகளை)அனைத்தையும்
ஒன்று கலந்து மிக்சியில் நன்றாகஅரைத்திடவும்
(அவரவர் தேவைக்கு ஏற்ப குருனையாகவே
அல்லது நைசாக பொடியாகவோ) இப்போது
சுவைமிகு இட்லி மிளகாய்ப்பொடி தயார்.
செஞ்சு பாருங்க. சாப்பிட்டபின் பதில் போடுங்க.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் SHEAF மதுரை T.R. பாலு.
பின் குறிப்பு :- 1954ல் பிறந்த நான் எனக்கு
வயது 21 ஆக இருக்கும்போதே எனது அன்புத்
தந்தையாரும் தாயாரும் எனக்குப் பார்த்த முதல்
பெண்தான் , எனது அன்பு இல்வாழ்க்கைத்
துணைவியாக அமைந்திட்ட புனிதவதி ஆகும்.
எனக்கு சமையல் கலையைக் கற்றுக் கொடுத்த
குருநாதரும் அவரும்தான். அவருக்கு இந்தக்
கட்டுரையை, எனது குரு காணிக்கையாக
சமர்ப்பணம் செய்து தருவதில், மிக்க மன
அமைதி அடைகின்றேன்.
குரு போற்றி !! குருவின் அருளே போற்றி !!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)