புதன், 6 மே, 2015

சுவையான மோர்க்கொழம்பு செய்வது எப்படி ? விளக்கம் நிறைந்த சமையல் குறிப்புக்கள் !!







                      மோ  ர்  க்  கு  ழ  ம்  பு



செய்யத்தேவையான பொருட்கள் :-


மோர் 5௦௦ ml,சம்பா வற்றல் (நீளமான நன்கு

காய்ந்தது) 5 முதல் 7 வரை,தேங்காய் துருவியது 

ஒரு கப், பச்சைமிளகாய் 5, சீரகம் சிறிதளவு, 

சின்ன வெங்காயம் உரித்தது, வெள்ளைப்பூசணி  

அல்லது வெண்டைக்காய் 3, கடுகு, உடைத்த 

உளுத்தம்பருப்பு, வெந்தயம், சின்ன வெங்காயம் 

அரிந்தது,கருகப்பிலைசிறிதளவு,சம்பாவற்றல்,

நல்லெண்ணெய், சிறிதளவு, உப்பு தேவையான 

அளவு,பெருங்காயத்தூள் சிறிதளவு.




செய்முறை :-


முதலில் மிக்ஸியில் மிளகாய் வற்றல், 

தேங்காய் துருவியது,பச்சை மிளகாய், உரித்த 

சின்ன வெங்காயம், சீரகம் இவைகளை இட்டு 

நன்றாக நைசாக அரைத்துக்கொள்ளவும். 

அதன்பிறகு இந்த அரைத்த கரைசலை மோரில் 

விட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும். அத்துடன் 

தேவையான அளவு உப்பு, பெருங்காயம் 

சிறிதளவு இதையும் சேர்த்துக்கொள்க. 

வெண்டைக்காய் போடுவது எனில் அதனை சிறு 

சிறு துண்டுகளாக நறுக்கி அதை எண்ணை 

ஊற்றி வதக்கி தண்ணீர் ஊற்றி நன்கு 

வேகவைத்து அதன்பின்பு கரைசலுடன் 

போடவேண்டும். 

வெள்ளைப் பூசணி போடுவதென்றால் 

வதக்கத் தேவை இல்லை.ஆனால் தண்ணீரில் 

நன்கு வேகவைத்துவிட்டு அதன் பிறகு 

கரைசலில் போடவும்.

வாணலியை  அடுப்பில் வைத்து அது நன்றாக 

காய்ந்ததும் அதில் நல்லெண்ணெய் 


ஊற்றி அதுவும் சூடானவுடன் கடுகு போடவும். 

அது வெடித்தவுடன் அதில் உடைத்த 

உளுத்தம்பருப்பு போட்டு அது நன்கு 

சிவந்தவுடன் கருகப்பிலை, அறிந்த சின்ன 

வெங்காயம் இவைகளையும் போட்டு 

அதன் பிறகு இதில் காய்ந்த மிளகாய் வற்றலைப் 

போட்டு அது நன்றாக வதங்கியதும், இதனை 

அப்படியே கரைத்து வைத்துள்ள 

மோர்க்கரைசலில் போட்டு அதன்பிறகு 

வாணலியில் இந்த மோர் கரைசலை ஊற்றி சூடு 

படுத்தவும். நொங்கு நுரை வந்தவுடன் 

( கொதிக்க விடக் கூடாது) உப்பு சரிபார்த்து 

இறக்கி பிறகு அதில் கொத்தமல்லி இலைகளை 

பரவலாக போட்டு பிறகு அதை சாதத்துடன் 

ஊற்றி பரிமாறிடவும். இப்போது சுவையான 

மோர்க்குழம்பு தயார். சாப்பிட்டு இன்புறுக . 


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை TR. பாலு )

சுவைமிகுந்த வத்தக்குழம்பு செய்வது எப்படி ? இதோ உங்களுக்காக !!








சுவைமிகு வத்தக்குழம்பு  ( புளிக்கொழம்பு )



செய்திடத் தேவையான பொருட்கள் :-


பழைய புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு,

இதயம் நல்லெண்ணெய் 1௦௦ ML, உரித்த

மலைப்பூண்டு 10 பற்கள் சற்று பெரிதாக,

சின்ன வெங்காயம் 10, புளிக்கொழம்பு பொடி

3 மேஜைக்கரண்டி*, கருவேப்பிலை சிறிதளவு,

கடுகு 1 மேஜைக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு,

(* தேவைக்கேற்ப)

செய்முறை :-

முதலில் எலுமிச்சம்பழ அளவு புளியை சற்று

குளிர்ந்த நீரினில் ஊறவைக்கவும் சுமார் 20

நிமிடங்கள்  வரையில்.  அதன்பிறகு அடுப்பில்

வாணலியை வைத்து அது சூடானவுடன்

இதயம் நல்லெண்ணெய் சுமார் 50 ML வரையில்

ஊற்றி, அது சூடானபிறகு கடுகு, வெந்தயம், 

ஆகியவைகளை போட்டு வறுத்த பின்னர், 

கருகப்பிலைபோட்டு வதங்கியவுடன், அதில் 

மலைப்பூண்டு 10,உரித்த சின்ன வெங்காயம் 10, 

ஆகியவற்றை போட்டுஅதையும் நன்றாக பொன் 

நிறமாக வறுத்து அதன்பின்பு இவைகளை அப்படியே   நன்கு கரைத்து வைத்த அந்தக்கரைசலில் ஊற்ற வேண்டும். அதன்


பிறகு அந்த வாணலியில் புளிக்கொழம்பு போடி 3 முதல் 5 கரண்டி ( தேவைக்கேற்ப) போட்டு இந்தப்போடியையும் நன்றாக வதக்க வேண்டும். அதன்பிறகு இந்த வதக்கிய பொடியில் நாம் ஏற்கனவே கரைத்துவைத்திருக்கும் புளிக்கரைசலில் சற்று மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கி வாணலியில் ஊற்ற வேண்டும். மேதம் உள்ள நல்லெண்ணையையும் இதில் ஊற்றிவிடவும். நன்றாக கொதித்து கொழம்பு கரைசல் நன்றாக வற்றியவுடன் கொழம்பில் இருந்து எண்ணெய் வெளியே வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூடான சாதத்தில் இந்த வத்தக் கொழம்பை ஊற்றி சாப்பிடவும். சுவையான இதுதான் வத்தக்கொழம்பு செய்திடும் வழிமுறை ஆகும். செய்து பார்த்துசாப்பிட்டு எனக்கு அதன் முடிவை சொல்லவேண்டிய மின்அஞ்சல்:- 


 astrobalu1954@gmail.com என்ற முகவரியில்


முடிந்தால் சொல்லவும்.


வத்தக்கொழம்பு பொடி செய்வது எப்படி ?


பொடி செய்யத்தேவையான பொருட்கள் :-




நீளமான மிளகாய் வற்றல்( நன்கு காய்ந்தது )

250 கிராம், மிளகு 2௦௦ கிராம், மல்லிவிதை 

2௦௦ கிராம், சீரகம் 1௦௦ கிராம், கருகப்பிலை 

1௦௦ கிராம். இதில் மிளகாய் வற்றலை நல்எண்ணெய் 1 கரண்டி ஊற்றி நன்கு வறுக்கவும். மீதி உள்ள பொருட்களான மிளகு,மல்லிவிதை,சீரகம், மற்றும் 
கருகப்பிலை ஆகியவற்றினை தனித்தனியாக 
எண்ணை எதுவும் ஊற்றாமல், தனியாக வாணலியில் வைத்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். சூடு நன்றாக ஆறியபின்பு, மிஷினில் கொடுத்து நன்கு நைஸாக பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தேவைக்கு ஏற்ப வற்றல் கொழம்பு செய்திடும்போது புளிக்கரைசலில் இந்தப் பொடியை மூன்று முதல் ஐந்து மேஜைக்கரண்டி சேர்த்து கொதிக்கவிட்டால், சுவையான
வற்றல்கொழம்பு தயார்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை.இரா.பாலு.


( மதுரை TR.பாலு )