என் சமையல் அறையில்....
புதன், 21 டிசம்பர், 2016
இட்லி உப்புமா செய்வது எப்படி ? ... அது இப்படி !!
இட்லி உப்புமா செய்வது எப்படி ?
" இட்லி உப்புமா "
செய்திடத் தேவையான பொருட்கள் :-
புதன், 24 ஆகஸ்ட், 2016
மண் மணக்கும் மதுரை சாம்பார் (சாதத்திற்கு சாப்பிடுவது) செய்வது எப்படி ? விளக்கவுரை !!
மதுரை சாம்பார் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் காலை வணக்கம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய இந்த
வலைதளத்தின் பெரும்பாலான அன்பு
ரசிகப்பெருமக்களிடம் இருந்து வந்திருந்த
வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இன்று
"மணமணக்கும் மதுரை சாம்பார் " செய்வது
எப்படி என்று இங்கே விளக்கமாக எழுதி
இருக்கின்றேன். அதை சமைத்துப்பார்த்து
நீங்களும் அதன் சுவைக்கு, ருசிக்கு, அடிமை
ஆகிடவேண்டும் என்று வாழ்த்தி, உங்கள்
முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றேன்.
************************************************************************************************************
மதுரை சாம்பார் !!
தேவையான பொருட்கள் :-
புளி நெல்லிக்காய் அளவு, துவரம்பருப்பு அரைக்கால் படி ( 2௦௦ கிராம்) MTR சாம்பார் பொடி 3 கரண்டி, மிளகாய் தூள் 2 கரண்டி, மஞ்சள் தூள் 2 கரண்டி, பெருங்காயத்தூள் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, தக்காளி 1,பச்சை மிளகாய் 6 நெட்டு வசத்தில் கீறியது ,முருங்கை
காய் பத்து துண்டுகள்,சின்ன வெங்காயம் தோல் உரித்தது 11,1 பெரிய வெங்காயம் தோல் உரித்து நெட்டு வசத்தில் நறுக்கியது, உருளைக்கிழங்கு 1, 1 காரட் வட்ட வடிவமாக நறுக்கியது, 2 பீன்ஸ் ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கியது,1அவரைக்காய்
அதே அளவில்நறுக்கியது,கடுகு,உடைத்த உளுத்தம் பருப்பு, வெந்தயம், தாளிக்க நல்லெண்ணெய் தேவையான அளவு.தாளிக்க
கருவேப்பிலை,கொத்தமல்லி தளைதேவையான அளவு, துருவிய தேங்காய் 3 கரண்டி.காய்ந்த சம்பாமிளகாய் வற்றல் (நீளமான)3.
செய்முறை :- முதல்நாள் இரவில் நெல்லிக்காய் அளவு புளி, அரைக்கால் படி துவரம்பருப்பு இவைகளை தனித் தனியே நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின்பு காலை ஊற வைத்திருந்த புளியை நன்கு அழுத்தி கரைத்து அதன் வடிசலைத்தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு ஊற வைத்திருந்த துவரம்பருப்பையும், உருளைக் கிழங்கு ஒன்றையும் குக்கரில் வேறு வேறு பாத்திரத்தில் வைத்து 3 விசில், 15 நிமிடம் அடுப்பை மினிமம் சூட்டில் வைத்து பின் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
அதன் பின்பு புளி கரைசலில் சாம்பாருக்குத் தேவையான அளவு உப்பு, 3 கரண்டி MTR சாம்பார் பொடி, 2 கரண்டி மிளகாய்த்தூள், 2 கரண்டி மஞ்சள்தூள்,சிறிது பெருங்காயத்தூள்,போட்டு, கட்டி இல்லாமல் நன்றாக கரைத்து கரைசலை
எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதன் பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அது நன்கு சூடானவுடன் அதில் மூன்று முதல் நான்கு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதுவும் சூடானபின்பு அதில் கடுகு நன்கு பொரிந்த பின்,
உடைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயம் சிறிதளவு இவைகளை போட்டு சிறிது பெருங்காயத்தூள் தூவவும். அதன் பிறகு கருகப்பிலை இலைகளை அதில் போட்டு பின் 3 காய்ந்த மிளகாய் வற்றலை போடவும். அதன் பிறகு நெட்டு வசத்தில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்,நான்கு துண்டுகளாக நறுக்கிய தக்காளி, பெரிய,சிறிய
வெங்காயம், காரட் உள்ளிட்ட காய்கறிகள், வேகவைத்து தோல் உரித்து எட்டு துண்டுகளாக வெட்டிய உருளைக் கிழங்கு, இவைகளையும் போட்டு 2 கரண்டி நல்லெண்ணெய் இந்தக் காய்கறி மீது ஊற்றி, நன்றாக கிண்டி அதனை
எண்ணையில் நன்கு வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாக ஆனவுடன், சாம்பார் பொடி புளி கரைசலை வாணலியில் ஊற்றவும். நன்றாக கொதிக்க விடவும். முருங்கைக்காய்நன்கு வெந்தவுடன் அதில் வேகவைத்து ஆறிய துவரம் பருப்பை நன்கு மசித்து, அதில் துருவிய தேங்காய் தூளை போட்டு, கொதித்துக்கொண்டு இருக்கும் சாம்பாரில் போடவும். அதில் தேவையான அளவு கொத்தமல்லி தளையையும் போட்டு, உப்பு, உரைப்புசரிபார்த்து இறக்கியபின்பு மேலும் கொஞ்சம் கொத்தமல்லி இதழ்களை தூவவும். இப்போது சுவையான மணமணக்கும்
" மதுரை சாம்பார் "
உங்கள் நாவின் ருசிக்காகக் காத்திருக்கிறது.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
புதன், 6 ஜனவரி, 2016
சுவைமிகுந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி ?
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் !!
தேவையான பொருட்கள் :-
நீளவசம் உள்ள சேப்பங்கிழங்கு 250 கிராம்,
வறுப்பதற்கு எண்ணை தேவையான அளவு,
உப்புத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் ருசிக்கு
ஏற்ப.
செய்திடும் முறை :-
முதலில் நீளவசம் உள்ள சேப்பங்கிழங்குகளை
நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்து அதன் பின்னர் அதை ஒரு வாணலியில் உள்ள கொதிக்கும்நீரில் போட்டு நன்றாக வேக வைத்திடவும். அது நன்றாக வெந்த பிறகு அதை வெளியில் எடுத்து சூடு நீங்கி ஆற வைக்கவும். அதன்பின்பு அந்தக் கிழங்குகளை அதன் வெளிப்புறத் தோல்களை நீக்கி விட்டு நீள வசத்தில் ஒரு கிழங்கினை மூன்று முதல் நான்கு
துண்டுகளாகநெட்டுவசத்தில்உடைந்துவிடாமல்
பக்குவமாக நறுக்கி அதை நன்றாக காய வைக்க
வேண்டும். சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள்
(நறுக்கி வெந்த கிழங்குத்துண்டுகளை) காய்ந்த பிறகு ஒரு வாணலியில் பொரிப்பதற்கு எண்ணையை விட்டு அது மிதமான சூடு அடைந்த பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்த சேப்பங்கிழங்குதுண்டுகளை போட்டு மிதமான சூட்டில் நன்றாக பிரவுன் நிறம் வருகின்ற வரை, அடுப்பின் அருகில்
இருந்து கொண்டே நன்றாக கிழங்குத் துண்டுகளை கவனத்துடன் வறுக்கவேண்டும். எண்ணையில் பொங்கிடும் நுரைகள் அடங்கிவிட்டது என்றால், நன்றாக கிழங்கு
துண்டுகள் வெந்து விட்டன என்று பொருள். அதன் பிறகு அந்தக் சேப்பங்கிழங்குத துண்டுகளை எண்ணைநன்றாக வடிந்த பிறகு அதில் தேவைக்கு/ருசிக்கு ஏற்ப உப்புத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் தூவி நன்றாக
பிறட்டி அனைத்துக் கிழங்குத் துண்டுகளிலும் அந்த தூள்களை நன்றாக கலந்திடும் படியாக பிறட்டிக்கொடுத்து அதன்பின்பு சாப்பிட பரிமாறவும். இப்போது சுவை மிகுந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
செவ்வாய், 24 நவம்பர், 2015
சுவைமிகுந்த பாசிப்பருப்பு சாம்பார் (இட்லி,தோசைக்கு) செய்வது எப்படி ?
பாசிப்பருப்பு சாம்பார் !!
( இட்லி மற்றும் தோசைக்கு )
செய்யத் தேவையானவை:-
உருளைக்கிழங்கு ஒன்று, தக்காளி ஒன்று,
பச்சைமிளகாய் 6, காரட் ஒன்று, பெரிய
வெங்காயம் ஒன்று, சிறிய வெங்காயம் 6,
கொத்தமல்லி & கருகப்பிலை தேவையான
அளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, மிளகாய்
தூள் 3 மேஜைக்கரண்டி, மஞ்சள் தூள் 1 மேசைக்
கரண்டி, பாசிப்பருப்பு ஒரு கை அளவு, கடுகு,
உளுத்தம்பருப்பு, 3 சிவப்பு மிளகாய் ( தாளிக்க)
உப்பு தேவையான அளவு,எண்ணைதேவையான
அளவு.
செய்முறை :-
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தக்காளி,
உருளைக்கிழங்கைதோலைசீவியபின்பு
நறுக்க வேண்டும்,பச்சைமிளகாய், காரட் , பெரிய
மற்றும் சிறிய வெங்காயம் இவைகளை நறுக்கி
வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு
பாத்திரத்தில் பாதி அளவிற்கு சற்றுக் குறைவாக
நல்ல தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில்
மேலே சொன்ன மூன்று மேஜைக்கரண்டி
மிளகாய்த் தூள், ஒரு கரண்டி மஞ்சள் தூள்,
சிறிதளவு பெருங்காயத்தூள்
இவைகளைப்போட்டு,
அதில் ஒரு கையளவு பாசிப்பருப்பு,
கருகப்பிலை,கொத்தமல்லி ஆகியவைகளையும்
போட்டு,நன்றாக கலக்கியபின்பு அதில் நறுக்கி
வைத்த காய்கறிகளை போடவும் பின் இதை மூடி
ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் விட்டு அது
நன்குகொதித்த பின்பு இந்த பாத்திரத்தை அந்த
பிரஷர் குக்கரில் வைத்து, குக்கரில் இருந்து
இரண்டு விசில் சத்தம் வந்தபின்பு காஸ்
அடுப்பினை குறைவான வெப்பத்தில் சுமார் 15
நிமிடம் வைத்த பின்பு, அடுப்பை அனைத்து
விடவும். குக்கர் நன்றாக ஆறியபின்பு,
அதைத்திறந்து அதில் உள்ள பாத்திரத்தை
வெளியே எடுத்து அதன் பின்னர் மட்டுமே
தேவையான அளவு உப்பு போடவேண்டும்.
அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து
அது சூடானபிறகு அதில் கடுகு,உளுத்தம்பருப்பு,
போட்டுநன்குபொரிந்தவுடன்,அதில்கருகப்பிலை,
மற்றும் சிவப்பு மிளகாய் மூன்று ஆகியவற்றை
போட்டு அதில், பாத்திரத்தில் உள்ள பாசிப்பருப்பு,
காய்கறி கலவைகளை போட்டு, நன்றாக
கொதிக்க விட்டு, உப்பு சரி பார்த்து இறக்கினால்
சுவைமிகுந்த பாசிப்பருப்பு சாம்பார் தயார்.
நன்றி !! வணக்கம் !!
செப். திருமலை.இரா.பாலு.
வெள்ளி, 13 நவம்பர், 2015
சுசி சட்னி செய்வது எப்படி ?
பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
சுசி சட்னி
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம். தினசரி நமது
காலை உணவில் இட்லி, தோசைக்கு,
தேங்காய் சட்னி, பச்சைமிளகாய் சேர்த்தும்
சிவப்பு மிளகாய் சேர்த்தும் சாப்பிட்டு,சாப்பிட்டு
அலுத்துசலித்துப் போனவர்கள், கீழே கண்ட
சுசி சட்னியை அரைத்து சாப்பிட்டால் அதன்
சுவை அறிந்து அதன் பின்பு நீங்க தேங்காய் சட்னி வேண்டவே வேண்டாம்ன்னுசொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.
என்ன....நான்..சொல்றது..செஞ்சு பாருங்க..
சாப்பிட்டுப்பார்த்திட்டு பிறகு சொல்லுங்க....
நன்றி.வணக்கம்.
அன்புடன். செF. திருமலை.இரா.பாலு.
******************************************************
சுசி சட்னி செய்யத் தேவையானவை :-
பெரியவெங்காயம் 2, தக்காளி 1 (நடுத்தர அளவு ),
பச்சைமிளகாய் 5, பெருங்காயத்தூள் சிறிதளவு,
உடைச்ச உளுத்தம்பருப்பு தாளிக்க, உப்பு மற்றும்
எண்ணை தேவையான அளவு.
செய்முறை :- (Method of cooking )
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அது
சூடானவுடன் அதில் சிறிதளவு டபுள் ரீபைண்டு
எண்ணையை ஊற்றவும். பின் அதில் உடைச்ச
உளுந்து மற்றும் சிறிது பெருங்காயத் தூளை
தூவி, உளுந்து பொன்னிறமானவுடன் அதனை
தனியாக ஒரு சிறிய தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும். பின்னர் அந்த வாணலியில்
உள்ள சூடான எண்ணையில் ஏற்கனவே நறுக்கி
வைத்துள்ள பச்சை மிளகாய் 5ஐ அதன்
பச்சை நிறம் மாறிடும் வரை வதக்கியவுடன்
அதில் நறுக்கிவைத்த இரண்டு பெரிய
வெங்காயத்தின் சின்னஞ்சிறிய துண்டுகளையும்,
தக்காளித் துண்டுகளையும் போட்டு,வெங்காயம்
பொன்னிறமாக மாறிடும் வரையிலும் நன்றாக
வதக்கி வைக்கவும். அப்போதே அதற்குத்
தேவையான உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
இவை நன்றாகவதங்கியவுடன், நன்றாக சூடு
ஆறிட வைத்து நன்கு ஆறியபின்பு, அதை மிக்சி
ஜாரில் போட்டு நன்றாக மையாக அரைக்கவும்.
(தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு நீர்
ஊற்றலாம்) நன்கு மையாக அரைந்த
பின்னர் நாம் ஏற்கனவே தாளிச்சு எடுத்து
வைத்துள்ள உடைச்ச உளுத்தம்பருப்பை
மிக்சியில் போட்டு ஒன்று அல்லது ரெண்டு
மூன்று சுற்றுக்கள் மட்டும் மிக்சி ஜாரை
சுற்றவிட்டு, அதன் பின்பு சட்னியை வெளியே
எடுத்து பரிமாறவும். சுவையான சுசி சட்னி தயார்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். செF. திருமலை.இரா.பாலு.
திங்கள், 2 நவம்பர், 2015
சுவை மிகுந்த துவரம் பருப்பு சாதம் செய்வது எப்படி ? விளக்கிக்கூறிடும் சமையல் குறிப்புகள் !!
துவரம் பருப்பு சாதம்.
தேவையான பொருட்கள் :- ( நான்கு பேர்கள்
சாப்பிட)1/16 வீசம் படிக்கு சற்று குறைவாக
துவரம் பருப்பு,பொன்னி புழுங்கல் அரிசி
அரைக்கால் படி அளவு, காய்ந்த சிவப்பு மிளகாய்
6 ( சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்)புளி ஒரு
நெல்லிக்காய் அளவிற்கு, தேங்காய் துருவியது
கால் மூடி, சின்ன வெங்காயம் உரித்தது 6,
நல்லெண்ணெய் தேவையான அளவு, உப்பு
தேவையான அளவு, பெருங்காயத் தூள்
சிறிதளவு, சீரகம் சிறிதளவு, கடுகு, உடைத்த
உளுத்தம்பருப்பு தாளிக்க,கருகப்பிலை
சிறிதளவு.
செய்முறை :- ( RICE COOKER METHOD )
முதலில் துவரம் பருப்பினை பிரஷர் குக்கரில்
நன்குவேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
நெல்லிக்காய் அளவு புளியை நன்றாக
ஊறவைத்து பின் அந்தக் கரைசலை
தனியாக எடுத்துக்கொள்ளவும்.
ரைஸ் குக்கரில் அரைக்கால் படி அளவுள்ள
பொன்னி புழுங்கல் அரிசிக்கு அதே அரைக்கால்
படி அளவிற்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து
வேகவிடவும். அதன் பின் அந்த சாதம் மூன்றில்
இரண்டு பங்கு வெந்தவுடன் அதில் கரைத்து
வைத்த புளிக்கரைசலுடன், 6 சிவப்புமிளகாய்
வற்றல் அதனுடன் மூன்று தோலுரித்த சின்ன
வெங்காயம், இவற்றை மிக்சியில் அரைத்து
எடுத்து இதை அந்த புளிக்கரைசலோடு சேர்த்துக்
கலந்துபின்புஇதனுடன்மஞ்சள்தூள்,
பெருங்காயத்தூள், சாதத்திற்குத் தேவையான
அளவு உப்பு கலந்து ரைஸ் குக்கரில் உள்ள
முக்கால்பாகம் வெந்துள்ள சாதத்துடன்
கலக்கவும். இது நன்றாக கொதித்து வற்றிய
பின்பு தனியாக மிக்சியில் அரைத்து வைத்துள்ள
கால் முறி தேங்காய்த்தூள்,மூன்று தோலுரித்த
சின்ன வெங்காயம், சீரகம் சிறிதளவு இவற்றை
மிகவும் நைசாக அரைத்து அந்த விழுதை
சாதத்துடன் ஊற்றி கருகப்பிலை சிறிதளவு
கிள்ளிப்போட்டு, நல்லெண்ணெய் ஊற்றிக்
கிண்டிக்கொண்டே வரவும். சாப்பிடும்
பக்குவத்திற்கு சாதம் வரும் வரை.
இதன்பிற்கு அடுப்பில் வாணலியை
அடுப்பில் வைத்து, சூடானவுடன் அதில்
நல்லெண்ணெய் சற்று தாராளமாக ஊற்றி அது
சூடானவுடன் அதில் கடுகு, காய்ந்த மிளகாய்
ஒன்று,உடைத்த உளுத்தம் பருப்பு, கருகப்பிலை
சிறிதளவு இவற்றையும் போட்டு நன்கு வதங்கி
பொரிந்தவுடன் இதனை குக்கரில் உள்ள துவரம்
பருப்பு சாதத்தினில் ஊற்றி ரைஸ் குக்கரை
அணைத்துவிட்டு வேறு ஒரு பாத்திரத்திற்கு
இதை மாற்றியபின் பரிமாறிடவும்.
இப்போது சுவைமிகுந்த துவரம்பருப்பு சாதம்
தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள தயிருடன்,
பெரியவெங்காயத்தினை அறிந்து உப்பு சேர்த்து
கலக்கி, சாப்பிட மேலும் சுவை கூடிடும். ( இந்த
சமையல் குறிப்புக்கள் அனைத்தும் எனக்கு
சமையல் கற்றுத்தந்த எனது குருநாதர் எனது
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய எனது
வாழ்க்கைத் துணைவி திருமதி B.புனிதவதி
அவர்கள் எனக்குக் கற்றுத் தந்ததை நான்
உங்களுக்கு கற்றுத் தருகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
சனி, 24 அக்டோபர், 2015
புளி மிளகாய் செய்வது எப்படி ?
" புளி மிளகாய் "
செய்யத் தேவையான பொருட்கள் :- புளி
சிறிதளவு,(நெல்லிக்காயின் அளவு),பெரிய
வெங்காயம் ஒன்று,பச்சை மிளகாய் பெரியதா 3,
காய்ந்த மிளகாய் 1, உப்பு தேவையான அளவு,
நல்லெண்ணெய் 1௦௦ மில்லி, வெல்லத்தூள்
சிறிதளவு.
செய்முறை :- முதலில் பச்சைமிளகாயை
சிறு,சிறு துண்டுகளாகவும், பெரிய
வெங்காயத்தை சிறிய சைசிலும், காய்ந்த
மிளகாயை சரி பாதியாகவும் நறுக்கி
வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை
வைத்து அது சூடானவுடன், நல்லெண்ணெய்
ஒரு 1௦௦ மில்லி ஊற்றி அது நன்கு சூடானவுடன்
அதில் நறுக்கி வைத்த பச்சைமிளகாய், காய்ந்த
மிளகாய்,பெரிய வெங்காயத் துண்டுகள்
இவற்றினைப் போட்டு நன்றாக வதக்க
வேண்டும். இவைகள் நன்கு வதங்கிய பிறகு
தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் ஊற
வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும். நன்றாக
இதை கிண்டிக்கொண்டே வரவும். நன்கு வற்றி
அது தான் குடித்த எண்ணையை வெளியிட
ஆரம்பித்ததும், தூளாக இடித்து வைத்துள்ள
வெல்லத்தைபோட்டு,உப்பு சரி பார்த்து இறக்கி
வைத்து நன்றாக ஆறிய பின்பு, கை படாமல் ஒரு
பாத்திரத்தில் ஊற்றிவைத்து பின்னர் இதை தயிர்
சாதம், மோர்சாதம், சப்பாத்தி முதலியவற்றிற்கு
தொட்டுகொண்டு சாப்பிடவும்.
இப்போது சுவை மிகுந்த புளி மிளகாய் தயார்.
நன்றி. வணக்கம்
அன்புடன். திருமலை.இரா.பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)